சனி, 22 அக்டோபர், 2016

சீனப்பட்டாசு

தமிழக அரசே!
தமிழக அரசே!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீனப்பட்டாசுகளை தமிழகத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் கடத்தல்காரர்கள் மீதும்,விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை *தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு*எடுக்க கோரிக்கை

இந்தியாவில் சீனப்பட்டாசுகள் விற்பனை செய்வதற்குதடைவிதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசுகளின் மார்க்கெட் விலையை விட 85% குறைந்தவிலைக்கு சீனப்பட்டாசுகள் கிடைப்பதால் பெரும் லாப நோக்கம் கொண்ட வியாபாரிகள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மனிதகுலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடிய "பொட்டாசியம் குளோரைடு" "பெர்குளோரைடு""சல்பர்" இரசாயனம் கலந்த சீனப்பட்டாசுகளை வெடிப்படதால் சத்தம்,புகை எல்லாம் அதிகம் இதனால் மூச்சுதிணரல்,மயக்கம்,ஆஸ்துமா,கேன்சர் போன்ற நோய்கள் ஏற்ப்படகூடிய வாய்ப்புகள் உள்ளது.

சிவகாசியில் பேப்பர் கண்டெய்னர் பயண்படுத்தி பட்டாசுகள் செய்கிறார்கள்.சீனாவில் பிளாஸ்டிக் கண்டெய்னர் பயண்படுத்துகிறார்கள்.நமது பட்டாசை விட சீனப்பட்டாசுகள் 30 மடங்கு சுற்றுசூழல் பாதிப்பை உருவாக்கும்.

குட்டி ஜப்பான் என்று அழைக்ககூடிய சிவகாசியின் பட்டாசு தொழிற்சாலைகள் சீனப்பட்டாசுகளின் வரவுகளால் முடங்கிய நிலையில் இருக்கின்றது.இந்தியாவில் 90%பட்டாசு தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டத்தில் தான் இருக்கின்றது.சிறிய,பெரிய தொழிற்சாலைகள் சுமார் 800 இருக்கின்றது.

முதன்மைத் தொழிலான பட்டாசு உற்பத்தி மட்டுமின்றி சார்பு தொழில்களான அச்சுத் தொழில், அட்டைப் பெட்டி, காகிதக் குழாய் போன்ற மூலப்பொருள் தயாரிப்புத் தொழில்களும் அழிந்து விடுவதுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

பட்டாசு தொழில் ஒன்றை நம்பி விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் தொழிலாளர்களும், நாடு முழுவதும் பல  லட்சம் சில்லறை விற்பனையாளர் குடும்பங்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய சூழ்நிலை சீனப்பட்டாசுகளால் உருவாகி உள்ளது.

2000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கக்கூடிய சீனப்பட்டாசுகளில் இருக்கக்கூடிய ரசாயணமாக பொட்டாசியம் குளோரைடு பெர்குளோரைடு சல்பர் போன்ற பொருள்களால் வெடிகுண்டுகள் கூட செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு சீனப்பட்டாசுகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது.

தங்களது வாழ்வாதாரத்தை வளமாக்கி கொள்ள தமிழகமக்களுக்கு உடல் ரீதியாகவும்,பொருளாரார ரீதியாகவும்,நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய சீனப்பட்டாசுகளை விற்பனை செய்யும் சட்ட விரோத கடத்தல் வியாபாரிகளை தேச விரோத வழக்கில் கைது செய்து நமது மக்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும்,நாட்டின் பாதுகாப்பையும் காப்பாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

*தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ®*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக