செவ்வாய், 27 டிசம்பர், 2016

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நாடார் சங்கம் சார்பாக நன்றி

அன்று உண்மையை உரக்க சொன்ன தமிழக முதல்வருக்கு இன்றும் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.தமிழ்நாடு நாடார் சங்கம்.
**********************************************

நாடார்கள் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்: ஜெயலலிதா
×××××××××××××××××××××××××××××××××××
Posted by: Chakra | Fri, Nov 16, 2012,

மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ள பகுதிகளை உடனே நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினர் பற்றி வெளியிட்டுள்ள அவதூறான கருத்தை அகற்ற நாடார் இன மக்கள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்த பாடப்புத்தகம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் 168-வது பக்கத்தில் 8-வது சாப்டரின் 4-வது பாராவில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதில் நாடார் சமூகத்தினர் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு முரணானது. உண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக இன குடிமக்கள் நாடார்கள்தான். குமரி மாவட்டம் தமிழ் நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழும் மாவட்டமாகும். அந்த மாவட்ட தமிழ் நாகரீகம் பற்றி தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு வாய்ந்த இந்த மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்கள் தொல்காப்பியர், அதங்கோட்டாசான் பிறந்தனர்.

மேலும் திருவிதாங்கூர் மன்னர்களின் கொடூர ஆட்சியை எதிர்த்து குமரி மாவட்டத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் குரல் கொடுத்தார். பல்வேறு சமுதாய சீர்திருத்தப் பணிகளை செய்த அய்யா வைகுண்டர் மேலாடை புரட்சி எனும் தோள்சீலை புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களால் மாபெரும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அவையெல்லாம் சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாடார் இன மக்களுக்கு பாரம்பரியம் உள்ளது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள். அந்த மரபு நிலமைக்காரர்களால் தொடரப்படுகிறது.

முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். நாடார்களின் ஆட்சி திருச்செந்தூர் தேரி மணல் காட்டுப்பகுதியில் கோலோச்சும் வகையில் இருந்தது. அவர்களது தலைநகராக கொற்கை திகழ்ந்தது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடார் இன மக்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.

எனவே சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது போல நாடார் சமூகத்தினர், கீழான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் நாடார் இன மக்கள் செய்துள்ள சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் போற்றத்தக்கது. கல்வி மற்றும் தொழில் துறையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்களது கடின உழைப்பையும், உறுதியையும் காட்டுகிறது.

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் நாடார் இனத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளும், பங்களிப்பும் ஏராளம்.

நாடார் சமூகத்தினர் பற்றி சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அவதூறான கருத்துக்களை அகற்ற வேண்டும் என்று பல்வேறு நாடார் இன அமைப்புகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளன. அந்த பாடப்புத்தக தகவல்கள் தவறான வழிகாட்டுதல்களாக உள்ளன.

மேலும் நாடார் சமூகத்தினர் பற்றி எதிர்கால மாணவர்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது. ஆகையால் நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை தாங்கள் தொடர்பு கொண்டு, நாடார் சமூகத்தினரை அவதூறாக சித்தரித்துள்ள பாடப்பகுதியை உடனே நீக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வியாழன், 1 டிசம்பர், 2016

நாடார் எதையும் நாடார்

நாடார் எதையும் நாடார்
×××××××××××××××××××××
பெருந்தலைவர் அவர்கள் எப்போதும் தனது இனப்பெயரை தன் பெயரோடு இணைத்து எழுதியதே இல்லை.இனப்பற்று என்னும் குறுகிய வட்டத்தை விட்டு வெளியே உலா வந்த உத்தமர் அவர்.மனிதம் போற்றிய மாமனிதர் அவர்.இன்னும் சொல்லப்போனால் நாடார் என்பது அவரைப் பொறுத்தவரை எதையும் நாடாதவர் என்னும் காரணப் பெயராகவே இருந்து வருகிறது.

பொன் நாடாமல் பொருள் நாடாமல்,சொந்தம் பந்தம் சுகம் நாடாமல்,மாடு மனை வீடும் நாடாமல் நாடொன்றையே நாடிய நாடிய நாடார் அவர்.ஆகவே தான் நன் உறவினர்களின் திருமண அழைப்பிதழ்களில் கூட தன் பெயரை போடாமல் பார்த்துக்கொண்டார்.நாடே வீடென்று வாழ்ந்த வெள்ளாடைத் துறவி அவர்.

அரசு மற்றும் அரசியல் உதவிகளுக்காக உறவென்று வந்தவர்களைக்கூட உதறியவர் அவர்.சொந்தம் என்பது வீடு வரைதான் என்னும் கருத்தில் எப்போதும் மாற்றம் செய்யாத மனிதர்.

மூன்று முறை முதல்வராக இருந்தபோதும் ஒரு முறை கூட தனது ஜாதியைச் சேர்ந்த எவரையும் மந்திரி சபையில் சேர்க்க மறுத்த மகத்துவம் நிறைந்த மாமனிதர் அவர்.எனவே நாடார் என்பது எதையும் நாடார் என்னும் பெருமைக்குரிய சொல்லே என்று சொல்வதில் நாடார்கள் அனைவருக்கும் பெருமையே.

*தமிழ்நாடு நாடார் சங்கம்*
******************************

வெள்ளி, 11 நவம்பர், 2016

55 ஆண்டுகள்... 1000 திரைப்படங்கள்! எறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசனங்களைப் பேசிய தமிழ் சினிமா அதன்பிறகுதான் காட்சி ஊடகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.

55 ஆண்டுகள்... 1000 திரைப்படங்கள்!
எறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசனங்களைப் பேசிய தமிழ் சினிமா அதன்பிறகுதான் காட்சி ஊடகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்.

"பாசமலர்', "விதி', "அன்பே வா' போன்ற படங்களின் வசனங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்கவில்லையென்றால் ஆரூர்தாûஸயும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதிய பெருமை ஆரூர்தாûஸ மட்டுமே சேரும் என்றால் அது மிகையில்லை. வெயில் பதுங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில், தி.நகர் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

""நாகப்பட்டிணத்தில் 1931ல் பிறந்தேன். என் அப்பா எஸ்.ஏ.சந்தியாகு நாடார், அம்மா ஆரோக்கியமேரி அம்மாள். நான் குடும்பத்தில் மூத்த மகன். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.படித்தேன். என்னுடைய பள்ளியில் கலைஞர் கருணாநிதி எனக்கு ஆறு வருடம் சீனியர். முரசொலிமாறன் எனக்கு இரண்டு வருட ஜூனியர். வளர்ந்து, வாழ்ந்தது எல்லாம் திருவாரூர்தான்.

ஜேசுதாஸ் என்கிற பெயரில் வேளாங்கன்னியில் ஞானஸ்நானம் பெற்றேன். என்னுடைய தகப்பனாருக்கு தமிழின் மீது ஆர்வம், அதில் புலமையும் உண்டு. ஆகவே, அப்பாவையே நானும் பின் பற்றி தமிழ் மீது மிகுந்த பற்று வைத்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ள மாணவனாக எல்லோராலும் பள்ளியில் அறியப்பட்டேன். அப்போதே சிறுகதைகள் எழுதவும் ஆரம்பித்தேன். அப்போது என்னுடைய மனதில் தமிழ் படித்து, புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியர் ஆக வேண்டும் என்னும் குறிக்கோள்தான் இருந்தது. என்னுடைய தகப்பனாரும் என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

1964ம் ஆண்டு என்னுடைய 22ம் வயதில் என் சொந்த அத்தை மகளான லூர்து மேரியை திருமணம் செய்து கொண்டேன். திருவாரூரில் என்னுடைய நண்பர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு "சின்னப்பா நாடக மன்றம்' என்கிற பெயரில் நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தேன். அதில் சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைந்த நாடகங்களையெல்லாம் நடத்தினேன். அத்துடன் தமிழ் மீதும் தீவிர கவனம் செலுத்திக்கொண்டு வந்தேன்.

என்.பி.முருகப்பா மூலம் தஞ்சை ராமய்யா தாஸ் அவர்களிடம் அறிமுகமாகி, அவரிடம் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்திற்கு உதவியாளராகச் சேர்ந்தேன். தமிழ் சினிமாவில் என்னுடைய ஆசான் அவர்தான். அவரிடமிருந்துதான் பிற இந்திய மொழிகளில் இருந்து படங்களை தமிழுக்கு டப்பிங் செய்வதை கற்றுக் கொண்டேன். அதன்மூலம் ஏராளமான படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் வாய்ப்பையும் பெற்றேன். "ஸ்ரீ ராமபக்த ஹனுமான்' மூலம் தமிழ் சினிமாவில் அடையாளம் கிடைத்தது.
முதன்முதலில் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த படம் "மகுடம் காத்த மங்கை'. அந்த சமயத்தில் பின்னணிக் குரல் ராஜு மூலம் அமரர் தேவர் பிலிம்ஸ் அதிபர் சான்ட்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் அறிமுகம் கிடைத்தது.

அதன்மூலம் "வாழ வைத்த தெய்வம்' படத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றேன். இந்தப் படம் 1958ல் தயாரிக்கப்பட்டது. இதில் ஜெமினி கணேசனும், சரோஜா தேவியும் நடித்திருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தாவாக மாறிப்போனேன்.

"உத்தமி பெற்ற ரத்தினம்', "கொங்கு நாட்டு தங்கம்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதினேன்.
அந்த சமயத்தில் (1959) ஜெமினி கணேசன் என்னை அழைத்துக்கொண்டு போய் நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்மூலம் "பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. "பாசமலர்' (1961) படம் எனக்கு பெரிய புகழைப் பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து "படித்தால் மட்டும் போதுமா', "பார்த்தால் பசி தீரும்',"பார் மகளே பார்', "அன்னை இல்லம்', "புதிய பார்வை', "தெய்வமகன்', "அன்பளிப்பு, "பைலட் பிரேம்நாத்' போன்ற சிவாஜி கணேசன் நடித்த 28 படங்களுக்கு வசனம் எழுதக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்தியாவில் ஒரே கதாநாயகனுக்கு ஒரே வசனகர்த்தா இவ்வளவு படங்களுக்கு எழுதியதில்லை. இது ஒரு அரும்பெரும் சாதனையாகும். இதன்மூலம் சிவாஜிகணேசனுக்கு ஆஸ்தான கதையாசிரியராக இருந்து ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினேன். இதற்கு காரணம் ஜெமினி கணேசன்தான்!

இதையொட்டியே 1960-61ல் தேவர் அவர்கள் மூலமாக எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்தது. முதன் முதலாக எம்.ஜி.ஆரின் "தாய் சொல்லை தட்டாதே' படத்துக்கு கதை-வசனம் எழுதினேன். இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தேவர் தயாரித்த "தாயைக் காத்த தனயன்', "குடும்பத் தலைவன்', "நீதிக்குப் பின் பாசம்',"வேட்டைக்காரன்', "தொழிலாளி', "தனிப்பிறவி', "தாய்க்கு தலைமகன்' போன்ற எம்.ஜி.ஆர். நடித்த
தேவர் பிலிம்ஸ் படங்களுக்கும் மற்றும் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா', "ஆசை முகம்', "தாலிபாக்கியம்', "தாழம்பூ', "பெற்றால்தான் பிள்ளையா' போன்ற எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களுக்கும் கதை-வசனம் எழுதினேன்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஒரே சமயத்தில் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அன்னையின் அருளால் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்தது.

உதாரணமாக 1962ல் தமிழ் வருடப் பிறப்பு நாளில் எம்.ஜி.ஆர். நடிப்பில், தேவர் பிலிம்ஸ் தயாரித்த "தாயைக் காத்த தனயன்', சிவாஜி நடித்த "படித்தால் மட்டும் போதுமா' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி நூறு நாட்கள் ஓடியது. எனக்குப் புகழையும் தேடித் தந்தது. அடுத்த ஆண்டு 1963ல் தீபாவளியன்று ஒரே நாளில் எம்.ஜி.ஆர்.நடித்த "பரிசு', சிவாஜி நடித்த "அன்னை இல்லம்' இரண்டும் வெளியாகி நூறு நாட்கள் ஓடி, வெற்றிப் பெற்றது.

1964ல் எம்.ஜி.ஆர். நடிப்பில், தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்', சிவாஜி பிலிம்ஸின் முதல் வண்ணப்படமான "புதிய பறவை' அடுத்தடுத்து வெளியாகி மேலும் மேலும் எனக்கு புகழைத் தேடித் தந்தது. இப்படியாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரு பெரும் நடிகர்களின் நிறைய வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் தமிழ் திரைப்பட வசனகர்த்தாக்களில் முதன்மை பெற்று முன்னணியில் இருந்தேன்.

"பூ ஒன்று புயலானது', "இதுதாண்டா போலீஸ்', "அம்மன்', "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.', "மை டியர் குட்டிசாத்தான்' போன்ற படங்களுக்கு தமிழில் வசனம் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன்.
திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியதைப் போலவே நிறைய இலக்கியங்களையும் எழுதியிருக்கிறேன். "திருக்குறள் அகராதி', "ஒரு கதை வசனகர்த்தாவின் கதை', "நாற்பது திரைப்பட இயக்குநர்களும் நானும்' ஆகிய நூல்கள் முக்கியமானவை. இவற்றில் முக்கியமானது நான் எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட "சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்' நூல் முக்கியமானது. இந்த நூல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. விற்பனையிலும் சாதனைப் படைத்திருக்கிறது.

1971-72க்கான சிறந்த திரைப்பட கதை-வசனகர்த்தாவாக தமிழக அரசு தேர்ந்தெடுத்து, கலைமாமணி விருதும், பொற்பதக்கமும் வழங்கியது. அதனையடுத்து 1996ல் தமிழக அரசு அறிஞர் அண்ணா விருதுடன் கூடிய "கலை வித்தகர் பட்டமும்', ஐந்து சவரன் பொற்பதக்கமும் வழங்கி என்னை கெüரவித்தது. 2005 -ல் நல்லி குப்புசாமி செட்டியாரின் பிரம்மகான சபா எனது "முத்தமிழ் கொத்து', "என் கரையைத் தொட்ட கலை அலை', "ஓ என் இனிய உலகமே' ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டு "சாதனை நாயகர்' என்ற விருதும் வழங்கியது. இது போன்று மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

வருகிற செப்டம்பர் 10ம் தேதி என்னுடைய "சதாபிஷேக பிறந்த நாள் விழா'வை நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தி, சிறப்பிக்க உள்ளார்கள் என்பது என்னுடைய தமிழ் திரைப்பட வாழ்க்கையில் மறக்க முடியாத குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்புச் செய்தியாகும். அவருக்கும், 55 வருடங்களாக நான் எழுதிய வசனங்களைக் கேட்ட ரசிக பெருமக்களுக்கு இந்த இடத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.

சனி, 5 நவம்பர், 2016

பத்திரிக்கையாளர்களின் தோழன்

‘‘காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்!’’

- என்று இதழியலுக்கு இலக்கணம் தந்தார் பாவேந்தர் பாரதிதாசன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கிற பத்திரிகைகள்தான் மற்ற மூன்று தூண்களில் படிந்துவிட்ட தூசிகளைக்கூட துடைக்கும் தகுதி பெற்றவையாக இருக்கின்றன.

ஆனால், இன்று பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அப்படி நினைப்பதும் இல்லை...
மதிப்பதும் இல்லை.

தாங்கள் உதிர்க்கும் அபத்தமான பொன்மொழிகளை, தாங்கள் வெளியிடும் உதவாக்கரை அறிவிப்புகளை, தாங்கள்செய்யும் பப்ளிசிட்டி கும்மாளங்களை மட்டும் இந்தப் பத்திரிகைகள் வெளியிட்டால்போதும் என்று ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள்.

அப்படி நடந்துகொள்ளும் பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை மட்டுமே மதிக்கிறார்கள். ஆனால் பெருந்தலைவர் காமராஜர், அனைத்துப் பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் சக பயணியாக நினைத்து நடத்தினார்.

‘நியூயார்க் டைம்ஸ்’ அந்தோணி லூகாஸ், ‘பிளிட்ஸ்’ கே.ஏ.அப்பாஸ், ‘மிரர்’ அர்ஜுன் தேவ், சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ ராதாகிருஷ்ணன், ‘பாரதம்’ பி.எஸ்.ராஜகோபாலன், ‘மெயில்’ கணபதி, ‘மக்கள் குரல்’ மு.காமராஜுலு, எம்.சண்முகவேல், ‘நியூவேவ்’ கிரிஷ்மாத்தூர், சக்ரவர்த்தி ஐயங்கார், ஏ.கே.வெங்கடேசன், ‘தினமணி’ ஏ.என்.சிவராமன், ஆர்.ராமச்சந்திர ஐயர், ‘இந்து’ எஸ்.சீனிவாசன், ‘சுதேசமித்ரன்’ என்.எஸ்.பார்த்தசாரதி, ‘நவசக்தி’ சங்கமேசுவரன், ‘நவ இந்தியா’ மு.நமசிவாயம், முருக.தனுஷ்கோடி, அருண் என்ற அருணாசலம், நா.கிருஷ்ணமூர்த்தி, ‘தினச்சுடர்’ ஆர்.சங்கரநாராயணன், ‘தினசரி’ டி.எஸ்.சொக்கலிங்கம், ‘தினசரி’ டி.சடகோபன், ‘பாரததேவி’ முருகன், ‘நவமணி’ ராமலிங்கம், ‘அலை ஓசை’ நாராயணன், எம்.பி.மணி, எ.பரசுராமன், ‘ஜனசக்தி’ அறந்தை நாராயணன், ‘மெயில்’  எஸ்.ராமநாதன் ‘சண்டே டைம்ஸ்’ பாலு, ‘நவசக்தி’ அ.சத்தியமூர்த்தி, சாவி, ‘துக்ளக்’ சோ, ‘கல்கண்டு’ தமிழ்வாணன், ‘சிவாஜி ரசிகன்’ சின்ன அண்ணாமலை புகைப்படக் கலைஞர் ‘சுபா’ சுந்தரம், ‘தினத்தந்தி’ சோமு, ‘ஜனயுகம்’ மயிலை நாதன், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வி.கே.நரசிம்மன், ‘நாத்திகம்’ பி.ராமசாமி, ‘பி.டி.ஐ’ கே.ஆர்.நாயர், ‘சமாச்சார்’ கே.வி.நாராயணன், ‘செய்தி’ பழ.நெடுமாறன், ‘தீபம்’ நா.பார்த்தசாரதி,  ‘சுதேசமித்ரன்’ எஸ்.வின்சென்ட், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்.வேம்புஸ்வாமி, ‘அண்ணா’ வீ.ரங்கநாதன், ‘ஆனந்த விகடன்’ ராவ் என்ற ராகவேந்திர காவளே, ‘அம்பி’ என்ற ஜகந்நாதன்... இவர்கள் அனைவருமே காமராஜரின் நண்பர்கள். தோழர்கள். சகாக்கள். பத்திரிகையாளர்கள்!

எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் நிருபர்களை அழைத்து அந்த ஊரைப் பற்றி விசாரிப்பார் காமராஜர். ‘இந்த ஊரில் முக்கியமான பிரச்னை என்ன?’ என்று கேட்பார். ‘மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறவர்கள் நீங்கள்தானே’ என்பார். ‘நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம்’ என்பார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும், தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும்போதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் - எப்போதும் நிருபர்கள் சந்திப்பை காமராஜர் தவிர்க்கவே இல்லை.

‘ஐயா உங்களை எப்போது சந்திக்கலாம்?’ என்று நிருபர்கள் கேட்டால், ‘உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் சந்திக்கலாம்’ என்றார்.

நிருபர்கள் கூடியதும், தான் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அவர்களிடம் கேட்டுவிட்டு, பிறகுதான் பேட்டியைத் தொடங்குவார்.

நிருபர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். இறுதியில், எதையெல்லாம் போட வேண்டாம் என்று நினைக்கிறாரோ, அதைச் சொல்லி ‘இதையெல்லாம் பிரசுரிக்க வேண்டாம்’ என்பார். ‘இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் என்பதற்காகச் சொன்னேன்.

பிரசுரிப்பதற்காக அல்ல’ என்பார். ஒரு மணி நேரத்துக்கு மேல் நிருபர்களிடம் பேசிவிட்டு, ‘இதில் எதையுமே போட வேண்டாம்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

‘வெளியிட வேண்டாம்’ என்று காமராஜர் சொன்ன செய்திகள் சில, டெல்லி பத்திரிகைகளில் வெளியாகிவிட்டன. சென்னை நிருபரின் அண்ணன், டெல்லியில் இருந்தார். அவர் மூலமாகப் போயிருக்கும் என்று காமராஜர் சந்தேகப்பட்டார்.

அதுதான் உண்மை. அடுத்த நிருபர்கள் கூட்டத்தில், அந்த நிருபரை அழைத்து, ‘உங்களிடம் நேர்மை இல்லை. அதனால் நீங்கள் வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

எல்லா நிருபர்களையும் பெயர் சொல்லி அழைப்பார். நிருபர்கள் தங்களை அறிமுகம்செய்ய பெயரைச் சொன்னால், ‘உன்னைத் தெரியும். உட்கார். வந்த விஷயத்தைச் சொல்லு’ என்பார்.

சுற்றுப்பயணங்களின்போது நிருபர்களை உடன் அழைத்துச் செல்வார். அவர்கள் சாப்பிட்டார்களா, படுக்க சரியான இடம் இருக்கிறதா என்று நேரடியாகப் பார்ப்பார்.

ஒரு நிருபர் சாப்பிடாமல் செய்திகொடுக்கப் போய்விட்டார். துடித்துவிட்டார் காமராஜர். ஒரு தமிழ் நிருபரை திருவனந்தபுரத்தில் பார்த்தார். விமானத்தில் தன்னோடு அழைத்து வந்துவிட்டார்.

தான் பேசப்போன கூட்டத்துக்கு அருகில் எதிர்க் கட்சியின் கூட்டம் நடப்பதைப் பார்த்து கூட்ட அமைப்பாளரிடம் கோபப்பட்டு, ‘இங்கு பேசமாட்டேன்’ என்று கோபம் ஆகி காரில் கிளம்பிய காமராஜர், அந்த இடத்தில் நிருபர் ஒருவர் நிற்பதை பார்த்து, ‘வண்டியில ஏறிக்க’ என்று சொல்லி ஏற்றிக்கொண்டார்.

கோபம் வந்தால், அவர் அருகில் யாரும் போகமாட்டார்கள். ஆனால், அந்தக் கோபத்திலும் நிருபரை தனது காரில் ஏற்றிக்கொண்டார்.

காசா சுப்பா ராவ் என்ற நிருபர் பிரிட்டன் போய்விட்டு வந்தார். நிருபர் கூட்டத்தில் அவரைப் பார்த்த காமராஜர், ‘பிரிட்டன்ல அரசியல் எப்படி இருக்கு, தேர்தல் எப்படி நடத்துறாங்கன்னு சொல்லுங்க கேட்போம்’ என்றார்.

நிருபர்களோடு அவரும் உட்கார்ந்து கேட்டார். சுப்பா ராவ் சொல்லி முடித்த பிறகுதான் பேட்டி ஆரம்பம் ஆனது. மயிலைநாதன், காமராஜரை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டார். பிறகு மயிலைநாதன், காமராஜரைப் போய் பார்த்தார். அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி பேசினார் காமராஜர். ‘ஜனசக்தி’ இதழில் ‘எரிமலை’ என்ற தலைப்பில் காமராஜரைக் கிழித்து தொங்க விட்டுக்கொண்டு இருந்தார்

அறந்தை நாராயணன். கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம், காமராஜரை சந்திக்கச் சென்றபோது அறந்தை நாராயணனை அறிமுகம் செய்துவைத்தார்.

‘‘தெரியுமே! ‘எரிமலை’யைப் படிக்கிறேனே!’’ என்றார் காமராஜர். எவரையும் பொசுக்கும் அறந்தையின் பேனா, ‘‘நான் தலைகுனிந்து நின்றேன்’’ என்று எழுதியது.

இவ்வளவு நட்பு பாராட்டியதற்குக் காரணம் அவர்களைவைத்து தனக்குச் சாதகமான செய்தி போடுவதற்கா?

கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி போகும்போது பள்ளத்தில் கார் உருண்டு காமராஜருக்கு பயங்கர காயம். ரத்தம் ஒழுகியது. லேசாக நினைவு திரும்பியதும் ‘தென்னகம்’ ஜி.ஆனந்தனை அழைத்து, ‘இந்த விபத்துச் செய்தியை பெருசா போடாதேண்ணேன்’ என்றார்.

காமராஜர் போபால் வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு ‘மெயில்’ இதழில் அவரை பாராட்டி கணபதி எழுதினார். போபால் வந்த காமராஜர், கடுமையாக அவரை கோபித்துக் கொண்டார். ‘நீங்கள் அதிர்ச்சி அடையறது மாதிரி நான் ஏதும் எழுதலையே’ என்றார்

கணபதி. ‘என்னைப் பாராட்டி எதுக்கு எழுதுறீங்க? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்கிறார் காமராஜர். ‘குமுதம்’ தொடருக்காக ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையும் பத்திரிகையாளர் மு.நமசிவாயமும் சந்தித்தபோது, ‘என்னைப் பெருமைப்படுத்தி எழுதுவதற்காக மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி எழுதிவிடக் கூடாது’ என்று கட்டளையிட்டார்.

அண்ணாவும், காமராஜரும் திடீரென ஒருநாள் சந்தித்தார்கள். இந்தச் செய்தியை காங்கிரஸ் ஆதரவு இதழான ‘நவசக்தி’க்கு காமராஜரே போன் செய்து சொன்னார். இந்தச் செய்தியை எழுதிய நிருபர் அதைச் சரியாக எழுதவில்லை. ஆசிரியர் குழுவே காமராஜரிடம் மன்னிப்பு கேட்டது. ‘‘பத்திரிகை தொழிலைப் பற்றி எனக்குத் தெரியும். அவசரத்துல இதெல்லாம் சகஜம்’’ என்று அனுப்பிவிட்டார்.

எது செய்தியாக வேண்டும், எது செய்தியாகக் கூடாது என்பதை உணர்ந்தும், உணர்த்தியும் பத்திரிகையாளர்களை மதித்தார் காமராஜர்.
‘உழைக்கும் பத்திரிகையாளர் சங்க’த்தில் இருந்ததால் பிரபல நாளிதழில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டார்

எம்.சண்முகவேல். முதலமைச்சர் காமராஜரிடம் போய் சண்முகவேல் இதைச் சொன்னார். தொழிலாளர் அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனையும், சட்ட அமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் வரவைத்துப் பேசினார் காமராஜர்.

நாளிதழ் நிர்வாகத்திடம் பேசி இழப்பீடு வாங்கித்தந்தார். தொழிலாளர் போராட்டம் காரணமாகப் பல்வேறு பத்திரிகைகளில் இருந்து விலகிய பத்திரிகையாளர்கள் சேர்ந்து கூட்டுறவுச் சங்கம் தொடங்கி அதன் மூலமாக ‘நவமணி’ என்ற நாளிதழைத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கு பல உதவிகள் செய்தவர் காமராஜர். அது பக்தவத்சலம் முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சி. அரிசி பஞ்சம், இந்தி போராட்டம் குறித்து காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ‘நவமணி’ எழுதியது.

அரசின் கூட்டுறவுச் சங்கம் மூலம் நடத்தும் இதழ், அரசை எதிர்த்து எழுதலாமா என்று காமராஜரிடம் புகார் சொன்னார்கள்.

அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ‘அது அவர்களது உரிமை’ என்றார்.

தி.மு.க ஆட்சியில் ‘அலை ஓசை’ நாளிதழுக்கு நெருக்கடி தரப்பட்டது. அப்போது ‘அலை ஓசை’ இதழை தனது ‘நவசக்தி’ அச்சகத்தில் அச்சடித்துத் தர காமராஜர் உதவினார். ‘அலை ஓசை’ அலுவலகம் தாக்கப்பட்டு, வேலூர் நாராயணன் காயம் அடைந்தபோது, அவர்களுக்கு இருந்த ஒரே காவல் அரண் காமராஜர்தான்.

அதிகம் பகிருங்கள்...!!!

*தமிழ்நாடு நாடார் சங்கம்#
முத்துரமேஷ்நாடார்